Published On May 4, 2019
கோவையை அடுத்துள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மிகச் சிறந்த தமிழ்ப் பேரறிஞருமான முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களை, அவர்தம் இல்லத்தில் கண்டு (மே, 1, 2019), தொல்காப்பியம் குறித்த சிறப்புரையை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம். ஐயா அவர்கள் தம் முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சற்றொப்ப இரண்டரை மணிநேரம் எங்களுக்குச் சிறப்புரை வழங்கினார்கள். காணொளியில் பதிந்த அந்த நிகழ்வை உலகத் தமிழர்களின் பார்வைக்கும் தொல்காப்பிய ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கும் வைக்கின்றோம். முதல்பகுதி தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் - அறிமுகம் என்ற பெயரில் அமைகின்றது. மற்ற சொல்லதிகாரம், பொருளதிகாரம் அறிமுகம் குறித்த இரண்டு பகுதிகளும் அடுத்தடுத்துப் பதிவேற்றப்படும். இக்காணொளியைத் தாங்கள் கண்டு மகிழ்வதுடன், தங்கள் நண்பர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். தங்களின் ஊக்கமொழிகள் எங்களை மேலும் நெறிப்படுத்தும் என்று பெரிதும் நம்புகின்றோம்.