Published On Jul 3, 2020
தமிழிசைத் துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு - என்னும் தலைப்பில், 04.07.2020, காலை 10 மணிக்கு, திருநெல்வேலி, சாராள் தக்கார் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற இணையவழித் தேசியக் கருத்தரங்கில் முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை வழங்கினார். பன்மொழி அறிவும், பல கலைகளில் ஆற்றலும் பெற்ற தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் வாழ்வும், கருணாமிர்த சாகரம் உள்ளிட்ட அவர்தம் நூலும், அவர்தம் பல்வேறு தமிழிசைப் பணிகளும் இவ்வுரையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆர்வலர்கள் கேட்டு மகிழ்வதுடன், தக்கார்க்கு அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
show more