Published On Mar 29, 2016
புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் 26.03.2016 மாலை தொல்காப்பியம் - செய்யுளியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பொழிவு நடைபெற்றது. இடம்: செகா கலைக்கூடம், நீட இராசப்பையர் தெரு. முனைவர் தி. செல்வம் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். முனைவர் கு.சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ப. பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் அரங்க.மு. முருகையன் உள்ளிட்டோர் உரையாற்றினர். புதுவையில் வாழும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் காணொலி வடிவத்தை உலகத் தமிழர்களின் பார்வைக்குப் பணிவுடன் வைக்கின்றோம். கூடுதல் செய்திகளை அடுத்த பதிவிலும் வழங்குவோம்.
show more