Published On Mar 27, 2018
வாழ்க்கை நாம் விரும்புகிற மாதிரி அமைவதில்லை. ஒருவருக்கு இயல்பாக நடக்கும் ஒன்று இன்னொருக்கு கடும் போராட்டமாக மாறிவிடுகிறது. பாலகனாய் பள்ளிக்கு செல்கிறார். உயர்நிலை, மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரியில் சேர்கிறார். பட்டம் முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பவருக்கு, நினைத்த மாதிரி இல்லை. இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைச்சது வீட்டுல உட்காரவா?, என்ன பையன் படிச்சிட்டு ஊரை சுற்றிக்கிட்டு இருக்கான் வேலைக்கு அனுப்பலையா? என வீட்டுக்குள்ளும் வெளியில் இருந்தும் வரும் தொடர் கேள்விகளால் தாத்தா சட்டையை பேரனுக்கு போட்டுவிட்ட மாதிரி பெருத்தமற்ற வேலையில் போய் சேர்க்கிறார். போராட்டம் தொடர்கிறது.
show more