திருக்குறள் அதிகாரம் 101 நன்றியில் செல்வம் | Thirukkural Nandriyil Selvam Adhikaram 101 | Wishvas
Wishvas World Wide Wishvas World Wide
1.95K subscribers
625 views
12

 Published On Premiered Nov 16, 2022

1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்

1002: பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

1003: ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

1004: எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

1005: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

1006: ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்

1007: அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று

1008: நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

1009: அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

1010: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

Voice Over : Panchamar Media

#Thirukkural #tamil #திருக்குறள் #நன்றியில்_செல்வம் #tamilnadu #திருவள்ளுவர் #Kural #thirukural #Thiruvalluvar #learning #learn #Nandriyil_Selvam #Adhikaram #student #education #educate #school
#smartlearning #wishvasworldwide

show more

Share/Embed