Published On Feb 19, 2023
கடந்த 08.01.2023 அன்று நமது பல்லடம் தாய் அறக்கட்டளை சார்பில் வனாலயத்தில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு தை மகளே வருக எனும் பொங்கல் விழாவின் ஒரு சிறப்பான கண்ணோட்டம்.
கால்நடை கண்காட்சி, மரபு பொருள் கண்காட்சி, இயற்கை அங்காடிகள், பாரம்பரிய விளையாட்டுக்கள்,கலை என பல்வேறு சிறப்புகளுடன் நடைபொற்றது நமது விழா.
காலை நிகழ்வாக உயர்திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மாணவர்களுடன் உரையாற்றினார்,
மாலையில் நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கத்துடன் தொடங்கியது விழா பிறகு சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் உணவும்,உழவும் தலைப்பில் மக்களிடம் உரையாற்றினார், பின் தீரன் கலை குழுவினரின் கம்பத்து ஆட்டம் மக்களை வெகுவாக ஈர்தது பிறகு சிட்லிங்கு பள்ளதாக்கு பழங்குடியனருக்கு 30ஆண்டு மருத்துவ சேவை புரியும் மருத்துவர் லலித்தா ரெஜி அவர்கள் இந்த மண்ணுக்கும் மாந்தர்க்கும் அறச்செயல் புரியும் மக்களுக்கு தாய் விருது வழங்கினர் பின்னர் சக்தி கலை குழுவினர் பவளகொடி கும்மியுடன் விழாவை சிறப்பாக முடித்தனர்.
சுமார் 4000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வுகளின் கணொளி தொடர்ச்சியாக நமது வலையொளியில் காணலாம் எனவே அனைவரும் பின் தொடரவும், நன்றி.