ஆனந்த துதி ஒலி கேட்கும் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம்
CSI Kanyakumari Diocese CSI Kanyakumari Diocese
17.4K subscribers
83,879 views
836

 Published On Premiered Apr 3, 2022

தென்னிந்தியத் திருச்சபை கன்னியாகுமரி பேராயம்
வேதமாணிக்கம் - ரிங்கல்தௌபே நினைவு
பேராய நற்செய்திப் பெருவிழா
மார்ச் 4 ,5, 6

தலைமை : Rt. Rev. Dr. A. R. செல்லையா (பேராயர், கன்னியாகுமரிப் பேராயம்)
அருள்செய்தி : Rev. Dr. M. ஞானவரம்
(முன்னாள் முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை)

பாடல்கள் : பேராயப் போதகர்கள் பாடகர்குழு

Diocese Convention 2022 Song Book is available in Diocesan Website.
http://www.csikkd.org/wp-content/uplo...


Contact: Revd Joseph C.G. Zenith (General Convener)

ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் (2)
ஆகாய விண்மீனாய்
அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ (2)
1
மகிமைப்படுத்துவேன் என்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே (2)
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு – ஆ
2
ஆதி நிலை ஏகுவோமே
ஆசீர் திரும்ப பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும் (2)
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ
3
விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகர் மீட்பருள்வாரே (2)
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ

show more

Share/Embed