Published On Jun 30, 2020
தக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் சிறுமலுக்கர். தாயார் ஆமீனா. இவரின் காலத்தைப் பற்றிய சரியான தடங்கள் இல்லை. கிபி 10, 13ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இசுலாமிய ஆண்டு ஹிஜ்ரி 800 க்கும் 1100 க்கும் இடைப்பட்டது. 108 சித்தர்களின் வரிசையில் அப்பா அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சமசுகிருத மருத்துவ நூல்கள் இவரை சித்த நாகார்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன.
தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)
அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.
திருமெய்ஞானச் சர நூல்
ஞான மலை வளம்,
ஞான ரத்தினக் குறவஞ்சி,
ஞான மணி மாலை
ஞானப் புகழ்ச்சி
ஞானப்பால்
ஞானப்பூட்டு
ஞானக்குறம்
ஞான ஆனந்தகளிப்பு
ஞான நடனம்
ஞான மூச்சுடர் பதிகங்கள்
ஞான விகட சமர்த்து
ஞானத் திறவு கோல்
ஞான தித்தி
அவரின் படைப்புக்களை வைத்து அவர் கிபி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர்.
இதில் ஞானக் குறவஞ்சிப் பாடலே இது.
குறவன் - குறத்தி பாடிய கேள்வி பதில் பாடலாக ஞானச் சுரங்கத்தை இப்பாடலுக்குள் வைத்திருக்கிறார் அப்பா பீர் முகம்மது.
#ThakkalaiPeerMohammedAppa #Siddhar #WisdomSong #SinganSingi #Tamil #ReachTNTVTamilOodagam