Published On Jul 30, 2024
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம், உங்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உண்மையில் பிரச்சனை நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பதை பற்றியதல்ல, எதற்காக செய்கின்றீர்கள் என்பதே?
இறைவனிடத்தில் நீங்கள் வேண்டும் போது அங்கு வேண்டுதல் மட்டும் தான் இருக்கிறது, இறைவன் இல்லை. பிரம்மத்தை தவிர இடையில் எதாவது காரணமோ நோக்கமோ இருந்தால் அந்த பிரார்த்தனை பரமாத்மாவை அடைவதில்லை
உங்கள் தேவைகளை ஆசைகளை பிரச்சனைகளை பிராத்தனையின் போது கொண்டு வருகின்றீர்கள், அதன் மூலம் உங்கள் தேவைகளை உங்களுக்கு நினைவூட்டி கொள்கின்றீர்களே தவிர பரமாத்மவுடன் உங்களால் இணைய முடிவதில்லை
இங்கு நான் இறைவன் பிரபஞ்சம் பரமாத்மா பிரம்மம் என்று குறிப்பிடும் அனைத்துமே ஒரே அர்த்தத்தில் குறிப்பிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இறைவனை மூன்று தன்மைகளாக உணர்ந்து கொள்ள வேண்டும், அவை தெய்வம் பிரபஞ்சம் , படைப்பாளர் என வகுத்து உணரும் போது அதன் சரியான தன்மையையும் பிரபஞ்ச மொழியையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்
நீங்கள் ஒன்றை அழகாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், பிரபஞ்ச அலைவரிசையில் நீங்கள் இயங்க ஆரம்பித்தால் பின் உங்கள் ஆசைகளை தேவைகளை அடைந்து விடலாம் என்ற உண்மை புரியாமல் மீண்டும் மீண்டும் தேவைகளோடே இறைவனை நாடுகின்றீர்கள்
பிரார்த்தனையில் இருப்பதனால் அது சரியான வேண்டுதல் ஆவதில்லை, உண்மையை அறிந்தவர்கள் பிரார்த்தனை செய்ய கூடாது என்பதல்ல, உங்கள் பிரார்த்தனை எதையாவது வேண்டுவதாகவே இருக்கின்றது, சின்ன சின்ன ஆசைகளை வைத்துக்கொண்டு பிரபஞ்சத்தை எதிர்க்கின்றீர்கள்,
உண்மையில் பிரார்த்தனை என்றால் என்ன என்று கூறுகின்றேன், எதனையும் வேண்டி கண்ணீர் மல்க நிற்பது பிரார்த்தனை அல்ல, பிரார்த்தனை என்பதே நன்றி கூறுதல், இல்ல ஒன்றுக்கு பொய்யாக கூறாமல் உண்மையில் மனதார எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நன்றி தெரிவிக்க முடியுமாக இருந்தால் அதுவே உண்மையான பிரார்த்தனையாகும்
ஏன் வேலை கொடுக்க வில்லை என்று கேட்க்கிறீர்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்க்கிறீர்கள், உங்கள் திருமணத்தை பற்றி கேட்க்கிறீர்கள் உங்கள் பிள்ளைகளை பற்றி கேட்க்கிறீர்கள், கிட்டதட்ட நீங்கள் இறைவன் மீது பழி போடுகின்றீர்கள் உங்களை அறியாமல், நீ எனக்கு ஏன் குறை வைத்திருக்கின்றாய் என்று உங்கள் மன அபிப்பிராயம் மூலம் உருவாக்கிய வாழ்க்கையை இறைவன் கொடுத்தாக எண்ணி பழி போடுகின்றீர்கள்
நீங்கள் உதவி நாடி போகும் ஒருவரை குறை சொல்லி விட்டு அவர் மீது பழி போட்டு விட்டு அவரிடத்தில் உங்களால் உதவியை பெற்று கொள்ள முடியும் என்று நினைக்கின்றீங்களா, சிந்தித்து பாருங்கள். செய்யும் தவறுகளை மாற்றுங்கள் , மனதை நண்பனாகுங்கள்
பிரபஞ்சத்தை அதன் அறிவை அறிந்து கொள்ளுங்கள், பிரார்த்தனையின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள், அபிமிதத்துக்காக ஆகர்ஷண காந்தமாக மாறுங்கள்
ஆகர்ஷண விதி, பண அலைவரிசை மற்றும் Infinity Answers ஆன்லைன் (Online) 1:1 வகுப்புகள் ஆரம்பமாகின்றன, இணைந்து கொள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்
https://wa.me/message/CRRERHMZT3AZK1
Kajarathan Nagaratnam
Law of Attraction Mind Coach
Changed 1500+ People's Life
+94 71 659 6986 (WhatsApp Only)
© 𝔹𝕖 𝕒 𝕄𝕒𝕘𝕟𝕖𝕥 𝔽𝕠𝕦𝕟𝕕𝕒𝕥𝕚𝕠𝕟