Published On Jan 1, 2013
Annabi SalluAlai - In Tamil
நன்னபி நயன மணி
நாதர் மேல் வாழ்துரைத்தான்
வளம் மிகப் பெருகி வர
வாயார சொல்வீர் ஸலா...த்
மக்க நகர் முழுமதி மேல்
எக்காலும் கோடி சலாம்
மதீனத்து இளங்கதிரே
கோடி மேற் கோடி சலாம்
நீதிநாள் ஆதாரம் மேல்
கோடான கோடி துரூத்
தீதுகள் தீர்த்து வைப்போர்
மீதிலே கோடி சலாம்
அறிவீர் அருள் நபிகள்
அத்துணை பேரிலும் மேல்
அங்கையர் ஆணையிட
அம்மதி பிளந்து காண்பீர்
இன்னுயிரே உளங்குளிர
கண்முன்னே வருவீர்களே
கல்பெனின் கண்ணில் வைத்தேன்
கருணை தருவீர்களே
முத்தொளியே மாணிக்கமே
முடிவில்லை புகழுதற்கே
முஸ்தஃபா எனுமினியோர்
மீதிலே கோடி ஸலாத்
நன்னபியை நினைக்கையிலே
நம்மிதயம் உயிர் பெறுமே
நஸாரா யூதருமே
தண் கரத்தில் சரண் பணிந்தார்
கண்ணியர் ஹஸன் வ ஹுஸைன்
மணமுயர்ந்த இரு மலர்கள்- நபி
கண்குளிர் அன்னை பதூல்
இன்னவரை வாழ்த்திடுவோம்
நாங்களோ நும்மடியார்
தாங்களோ சிறப்புயர்ந்தோர்
எங்களின் வாழ்வு எல்லாம்
தங்கள் புகழ் பாடுதற்காம்