Chennai Air Show: 34 வயது கணவனை இழந்து தவிக்கும் மனைவி- பிபிசி தமிழுக்கு தெரியவந்தது என்ன?
BBC News Tamil BBC News Tamil
2.21M subscribers
182,572 views
1K

 Published On Oct 7, 2024

சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார்.

விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, கூட்டம் அதிகமாக இருந்ததால் மனைவியையும் குழந்தைதையும் ஓரிடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற கணவர் கார்த்திகேயன் திரும்பவரவேயில்லை.

விமான சாகசத்தைப் பார்க்க அந்தப் பகுதியில் லட்சக்கணக்கில் ஆட்கள் குவிந்திருந்ததால் செல்போன்களுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில், இரண்டு மணி நேரம் கழித்துதான் கணவர் சாலையின் ஓரத்தில் விழுந்து கிடந்த தகவல் சிவரஞ்சனிக்குக் கிடைத்தது. இதற்குப் பிறகு, ஆம்புலன்சின் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது காலம் கடந்திருந்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#ChennaiAirShow #Chennai #DMK

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed