Published On Sep 13, 2021
தஞ்சாவூரின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மைகள் அவ்வூரின் கலை, பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளன.
19-ம் நூற்றாண்டு முதல் இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சரபோஜி மன்னர் காலத்தில் இக்கலைஞர்கள் மிகவும் மதிக்கப்பட்டனர்.
தலையாட்டி பொம்மை என்பது 'ராஜா' மற்றும் 'ராணி' என 2 பொம்மைகளை குறிக்கும்.
இந்த பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும், கனமாகவும் இருக்கும். புவிஈர்ப்பு விசை காரணமாக இதை சாய்த்து தள்ளினாலும் மீண்டும் செங்குத்தாக நிற்கும்.
தஞ்சாவூர் பொம்மைகளுக்கு 1999-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொம்மைகளை செய்யும் கலைஞர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.
இந்த வீடியோவில் வீட்டில் இருக்கும் தேங்காய் சிரட்டை, காகிதம் போன்றவற்றைக் கொண்டு நாமே தலையாட்டி பொம்மையை செய்யும் வழிமுறை விளக்கப்பட்டுள்ளது.