Published On Jan 1, 2022
Singer:S.Viyasar Lawrence
Music:V.Gokulraj
Writer:D Justin,J.Parathvairam
Contact:9003954884
உம் நாமம் சொல்ல சொல்ல
என் ஜீவன் வாழுதையா
உம் கிருபை தாங்க தாங்க
என் வாழ்வு செழிக்குதையா
என்னைத் தாங்கும் கிருபை
என்னை நடத்தும் கிருபை
என்னை சுமந்து காக்கும் கிருபை (2)
.......(உம் நாமம்)
என் பலவீனத்தில் பெலனை தருவது உங்க கிருபை தானே
தவறி விழுந்து போனவனை எழும்பச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
கிருபை உனக்குப் போதும் என்று சொன்னீரே கிருபைகள் போதுமே
எந்தத் தீங்கும் நேராமல் எந்த கஷ்டம் சேராமல் பாதுகாத்தீரே (2)
......(உம் நாமம்)
காலை வருவதும் மாலை மறைவதும் உங்க கிருபை தானே
இந்த புதிய நாளையும் காணச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
உனக்கு துணையாக நிற்பேன் என்று சொன்னீரே துணையாய் வாருமே கிருபை உன்னை விட்டு விலகாது என்றவரே கிருபையால் நிரப்புமே (2)
.....(உம் நாமம்)
வறண்ட பாலையை செழிக்க செய்வதும் உங்க கிருபை தானே
அந்த செங்கடல் நடுவே நடக்கச் செய்வதும் உங்க கிருபை தானே (2)
தேவனால் எல்லாமே கூடும் என்று சொன்னீரே அதிசயம் செய்யுமே
ஜெயமோ கர்த்தரால் வரும் என்று சொன்னீரே ஜெயமே தாருமே (2)
....(உம் நாமம்)