Published On Aug 14, 2024
கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளானூர் பகுதியில் மரகத பூஞ்சோலை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளானூர் பகுதியில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் துர்காதேவி வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார் மாதர்பாக்கம் வன சரகர் சதீஷ் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராஜன் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உள்ள மரகத பூஞ்சோலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்த மரகத பூஞ்சோலை சுமார் 2. 5 ஏக்கர் பரப்பளவில் தடிமர வகைகள் 11 பழவகை மரங்கள் 8 அலங்கார மர வகைகள் 11 ஆகிய மரங்கள் உள்ளது இந்த மரகத பூஞ்சோலையில் உள்ளது
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பா.சே. குணசேகரன், ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன்,திருமலை, பாஸ்கர், அறிவழகன், மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்