அறிவுடைமை | திருக்குறள் | Athikaram 43 | Thirukkural 421-430 | திருக்குறள் விளக்கம்
முனைவர் இரா.குணசீலன் முனைவர் இரா.குணசீலன்
9.17K subscribers
83 views
7

 Published On Jun 24, 2024

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.- 421

துன்பத்தில் காக்கும் கருவி,எதிரிகளால் அழிக்கமுடியாத அரண் அறிவு!

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422

மனதை நல்வழியில் செலுத்துவதே அறிவு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423

யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு. - 424

எளிமையாகப் பேசி, நுட்பமாகக் கேட்டு அறிந்துகொள்வது அறிவு

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு. - 425

உயா்ந்தோரிடம் பழகி, இன்ப, துன்பங்களைக் சமமாகக் காண்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு. - 426

உயர்ந்தோர் வாழும் வழியில் வாழ்வதே அறிவு

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

https://www.gunathamizh.com/2020/09/4...
அஃதறி கல்லா தவர். 427

அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவா், பேதையா் அறியார்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.- 429

வருமுன்காப்பவர் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். - 430

அறிவே உடைமை, பிற உடைமைகள் மதிப்பில்லாதவை

show more

Share/Embed