Published On Jun 29, 2024
திருச்செந்தூர் கடற்கரையில் மீண்டும் ஜெல்லி மீன்கள் வர தொடங்கியுள்ளது-
பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வகையான செஞ்சொறி மீன்கள் ( Labonema sp) மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் நீரின் திசை மாறுபாட்டிற்கு ஏற்ப காணப்படுகிறது. இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். ஆதலால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடுதல் கூடாது. அவற்றை அறியாமல் தொழுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் காந்தலை குறைக்க வினிகரை காயம் ஏற்பட்ட பகுதியில் சுமார் ஒரு நிமிடங்கள் தெளித்து பயன்படுத்தவும். பின்னர் கலமைன் அல்லது கலட்ரைல் மருந்தினை உடனடியாக பயன்படுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட காயம் சரியாகிவிடும்.
மேலும் நிகழ்வினை நேரடியாக அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக் அவர்கள். திருக்கோவில் ராமச்சந்திரன் ஏ எஸ் ஓ மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் திருமதி.கு.அ.புஷ்ரா ஷபனம், ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன், திரு.சிவராமகிருஷ்ணன் மற்றும் கடலோர காவல் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் மற்றும் கடலோர காவலர்கள் திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள். கடற்கரை பாதுகாப்பு பணியின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா @ ஜான் உட்பட பலரும் ஆய்வில் ஈடுபட்டனர்.
Tiruchendur murugan temple daily news
#tiruchendur #beach #tiruchendurtemple #tiruchendurbeach #tamilnadu