Published On Oct 3, 2024
நவராத்திரி பூஜையிலே நவ துர்கை அவதாரம்
நவராத்திரி பூஜையிலே நவதுர்கை
அலங்காரம்
சிலம்போசை கேட்கிறது நலம் பெறவே வாருங்கள்
புரட்டாசி திங்களிலே விரட்டுகிறாள்
அரக்கர்களை
பொன்னான நேரமிது பூ அள்ளித்
தூவுங்கள்
ஜெய ஜெய சங்கரி சாமுண்டேஸ்வரி ஜய ஜயபவானி ஜய ஜய துர்கா(நவராத்திரி)
வாசலிலே கோலங்கள் மாவிலை கள்
தோரணங்கள்
வீடெல்லாம் விளக்கேற்றி பாடல்கள்
பாடுங்கள்
தாயவளின் மனம் குளர்ந்தால்
தரையெல்லாம் பொன் விளையும்
வீரம் விவேகமொடு செல்வங்கள் வேண்டுங்கள் ஜய சங்கரி சாமுண்டேஸ்வரி ஜய ஜய பவானி ஜய துர்கா (நவராத்திரி)
இமயத்தில் அவள் பிறந்தாள்
குமரியிலே மலரந்திருந்தாள்
மதுரையிலே மணமுடித்தாள்
தில்லையிலே நடம் புரிந்தாள்
காஞ்சியிலே தவம் இருந்தால்
காசியிலே நலம் இருப்பாள்
காலமெல்லாம் நம்முடனே காளியவள்
தொடர்ந்திடுவாள்
சங்கரி பைரவி சாமுண்டீஸ்வரி
ஜய ஜயபவானி ஜய ஜய துர்கா (நவராத்திரி)