Published On Aug 8, 2021
🌺அன்று உப்பு நிலம்...
இன்று பொன் விளையும் பூமி...
வெற்றிக்கதை🌺
📌நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவில் கடந்த 5 ஆண்டுகளாக பயணிக்கும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த திரு.மோகன்தாஸ் அவர்கள் கடற்கரையிலிருந்து கடலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் எடமணல் எனும் சிற்றூரில் விவசாயம் செய்து வருகிறார்.
📌இவரின் விவசாய நிலமானது உப்பு மற்றும் உவர் கலந்த தன்மை உடையது, நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவின் வழிகாட்டுதலின்படி
📌குழி எடுத்து வரப்பு அமைத்தல்
📌இயற்கை முறையில் களைகளை அகற்றுதல்
📌பண்ணைக்குட்டைகள் அமைத்தல்
📌குளங்களை வெட்டுதல்
📌மழை நீரை முறையாக சேகரித்தல்
📌பலதானிய விதைப்பு செய்தல்
📌இயற்கை இடுபொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட அனைத்து முறைகளையும் சிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
📌இவ்வூரைச் சுற்றியுள்ள பிற நிலங்களில் யாரும் சிறப்பான பயிர் சாகுபடியும் செய்ய இயலாத நிலையில், இவர் தற்போது கடலை சாகுபடி செய்து ஒருங்கிணைந்த பண்ணைய முறையை செயல்படுத்தி வெற்றி கண்டு வருகிறார். திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. மோகன்தாஸ்
MOBILE NO: 9842470774
மகிழ்வுடன்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்