Published On Mar 20, 2020
Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil
திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை.
திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள்.
பாடல் #6: பாயிரம்
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் ஆமே.
பாடல் #7: பாயிரம்
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.
பாடல் #8 பாயிரம்
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.
பாடல் #9 பாயிரம்
நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
பாடல் #10: பாயிரம்
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
#aalayamselveer #திருமந்திரம்